ஒரு கிரேட் சலியூ ட் சார்


     திருப்பூர் போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆய்வாளர் ராக பணி புரிகிறார் .ஒரு காவலர் எப்படி பணி புரிய வேண்டும் என்பதில் உதாரணமானவர் .கடுமையான முகம் காட்டி கொண்டு இருக்கும் காவலர்கள் மத்தியில் அன்பாய் அனைவரிடமும் சிரித்த முகத்துடன் போக்குவரத்து ஒழுங்கு பணியை செய்வார். எனக்கு தெரிந்து இவர் இருந்தால் இவர் அன்புக்கு கட்டு பட்டு வெள்ளை கோட்டிற்கு அப்பால் நிற்பவர்கள் கூட வெள்ளை கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவார்கள் 


அன்பாய் அனைவரையும் கண்டிப்பார் . கையூ ட்டு வாங்காத அன்பான போலிஸ் காரர் உண்மையை சொல்ல வேண்டுமானால் ஒரு உண்மையானமனிதர் இவர் .

இவரை போல் தமிழக காவல்துறையில் காவலர்கள் இருந்தால் காவல் துறையே கவுரவம் நிறைந்ததாக மாறிவிடும்.

 கருப்பையா சார் உங்களுக்கு பசுமை நாயகன் சார்பாக 
 ஒரு கிரேட் சலியூட் சார்
  
                                                                                   -பசுமை நாயகன்